Saturday, December 1, 2012

தமிழ் ஆண்டுகள்


தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆக பகுக்கப்பட்டுள்ளன. முதல் 20 உத்தம ஆண்டுகள் என்றும், இரண்டாம் 20 மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி 20 அதம ஆண்டுகள் எனுமாறும் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

அவற்றின் தமிழ் பெயரை தெரிந்து கொள்ளுங்கள்..!


வடமொழிப் பெயர் -தமிழ்ப் பெயர்

பிரபவ -நற்றோன்றல்

விபவ -உயர்தோன்றல்

சுக்கில-வெள்ளொளி

பிரமோதூத-பேருவகை

பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்

ஆங்கீரச-அயல்முனி

சிறிமுக-திருமுகம்

பவ- தோற்றம்

யுவ-இளமை

தாது-மாழை

ஈசுவர-ஈச்சுரம்

வெகுதானிய-கூலவளம்

பிரமாதி-முன்மை

விக்ரம-நேர்நிரல்

விச-விளைபயன்

சித்திரபானு-ஓவியக்கதிர்

சுபானு-நற்கதிர்

தாரண-தாங்கெழில்

பார்த்திப-நிலவரையன்

விய-விரிமாண்பு

சர்வசித்த-முற்றறிவு

சர்வதாரி-முழுநிறைவு

விரோதி- தீர்பகை

விகிர்தி-வளமாற்றம்

கர-செய்நேர்த்தி

நந்தன-நற்குழவி

விசய-உயர்வாகை

சய-வாகை

மன்மத-காதன்மை

துன்முகி-வெம்முகம்

ஏவிளம்பி-பொற்றடை

விளம்பி-அட்டி

விகாரி-எழில்மாறல்

சார்வரி-வீறியெழல்

பிலவ-கீழறை

சுபகிருது-நற்செய்கை

சோபகிருது-மங்கலம்

குரோதி-பகைக்கேடு

விசுவாவசு-உலகநிறைவு

பராபவ-அருட்டோற்றம்

பிலவங்க-நச்சுப்புழை

கீலக-பிணைவிரகு

சவுமிய-அழகு

சாதாரண-பொதுநிலை

விரோதி கிருது-இகல்வீறு

பரிதாபி-கழிவிரக்கம்

பிரமாதீச-நற்றலைமை

ஆனந்த-பெருமகிழ்ச்சி

இராட்சச-பெருமறம்

நள- தாமரை

பீங்கள-பொன்மை

காளயுக்தி-கருமைவீச்சு

சித்தார்த்தி-முன்னியமுடிதல்

ரவுத்ரி-அழலி

துன்மதி-கொடுமதி

துந்துபி-பேரிகை

உருத்ரோத்காரி-ஒடுங்கி

இரக்தாட்சி-செம்மை

குரோதன்-எதிரேற்றம்

அட்சய-வளங்கலன்


:)

Wednesday, November 14, 2012

Watch your favorite video!


Dear Readers,

While thinking of some persons, we will be occupied with some special feel. Those persons may be our role models. Hmm.. Seguvara! He reminds a very honest path of leading life(a direct fighter who was even ready for giving his life in his goal accomplishment), A.R.Rahman gives a melodic feel over life by making us to live in his musical world  and the kargil soldiers who gave up their life for saving our lives....

In this road ahead, I want to remind you an ever energetic 80 years old youth, one of the greatest scientist - தமிழகத்தின் பெருமை திரு அப்துல் கலாம் அவர்கள்.

Please watch out this video which is a part of Mr. APJ Kalam's speech at European Union when he was the President of India.



Even he reaches the Himalayan height of popularity, it is not shown even a percentage in his face....

"அடக்கம் அமரருள் உய்க்கும்."

This encyclopedia is not only of technology, but also this dictionary of this century tells us how to move with life and people gently throughout.... He is worth a crore salutes....

The moral is - we have to uplift ourselves in any of the fields. Even after reaching the greatest heights, we should remember the place from where we had grown.!

Friday, November 9, 2012

A heart wrenching story of a poor Indian!


This is the heart-wrenching image of an Indian rickshaw worker who has been forced to take his newborn baby to work because there is no-one available to look after her.



Bablu Jatav has been carrying his one-month-old daugher, Damini, in a cloth sling around his neck since his wife Shanti died shortly after giving birth to her. The devoted dad, 38, said he was now forced to take the baby to work with him in Bharatpur city everyday because he has no other relatives to care for her.

Bablu Jatav has to take his newborn daughter to work because there is no-one available to look after her after his wife died shortly after giving birth. In another cruel twist baby Damini was rushed to hospital in Jaipur city earlier this week after she became critically ill .

She was in intensive care after being admitted with septicaemia, anemia and severe dehydration.
Luckily the newborn baby girl is now on the mend and said to be in a stable condition. 'Shanti died soon after delivering the baby at the hospital on September 20.'said Mr Jatav. 'Since then there has been no-one to look after my daughter, I keep her with me even when I pull my rickshaw.

Bablu Jatav was married to his wife for 15 years before she passed away after giving birth to their daughter.
'We had this baby after 15 years of our marriage, my wife was so happy when we were blessed with a daughter, but it is very sad she passed away.' Mr Jatav has been overwhelmed by offers of help after his story emerged and it is believed the Indian authorities are now stepping in to help Mr Jatav after hearing of his plight.

Two lessons can be stated from this story.
The first - God has made us in safe position. The second - We need to give our helping hands to those who are not in safe position...and tat's the reason why we're safe... Our life will be meaningful here...

Sunday, November 4, 2012

யார் இந்த மாமனிதர் ? இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!



தனி நபர் வளர்த்த காடு !


உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!

இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!

பின்குறிப்பு :

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்... என்ற நன்னோக்கத்தில் இச்செய்தியை பதிவு செய்கிறேன் .

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

இங்கே இடம்பெற்ற படங்கள் அனைத்தும் முலாய் காடுகளில் எடுக்கப்பட்டது !!

தகவல் - Facebook

புயல் எச்சரிக்கை கூண்டுகள்





1ம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

2 ம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

3 ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

4ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள். !



எங்கோ படித்தது ! நீங்களும் பின்பற்றலாமே !!

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Saturday, August 4, 2012

12 yr old Bihar boy cracked IIT-JEE exam!



In India, getting into IITs is a dream for almost all the school going children. Here goes a true record in examination..!

I was not even aware of IIT JEE exam during my age 12... But..... A 12-and-a-half-year-old boy from Bihar has cracked the highly competitive Indian Institute of Technology-Joint Entrance Examination (IIT-JEE).

Satyam Kumar of Bakhorapur village in Bhojpur district qualified from the Mumbai zone with an all-India rank of 8,137.

"I am happy to crack IIT-JEE but I will not join IIT this year because of my poor rank. I will attempt next year for a good rank," said Kumar over telephone on Saturday.

Kumar said he was keen to develop a software company on the lines of Facebook.

Kumar's father, Sidhnath Singh, a farmer, is proud of him. "It is a matter of pride that my son is the youngest to qualify for IIT-JEE," he said.

Kumar is still awaiting his class 12 results.

According to the father, Kumar passed the Class 10 board exam from Modern School in Kota, Rajasthan.

He said his son was intelligent since early childhood.

"He used to impress everyone with his talent even when he was barely five yearsold." This is why, the father said, he sent the boy to Kota for higher education.

"The entire village celebrated his success bursting firecrackers and consuming sweets," Singh said.

மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன்தந்தை
என்நோற்றான் கொள் எனும்சொல் !

Saturday, May 12, 2012

Lead life with peace!

Dear friends,

I want to share the most important valuable thought, which we need every moment of our life. Nowadays, it's very clear that nobody will keep us happy at all times even we are righteous. Some times, we should be the person for ourselves to console, motivate, laugh with. Please go ahead with this post which adds some moral values to lead a peaceful life.!


Do not recycle the past. 



Trying to recycle the past is like trying to save a totally black, half a year old banana, an almost impossible and worthless feat if accomplished at all. Instead of trying to recycle the past we should mainly be focused on living the best life that we can today progressing towards the dreams that we desire to fulfill ourselves in the future.

Remember that trying to liv...e in a place that you feel was the best time of your life, will only limit your future, and will only distract you from experiencing your present, which should be the best time in your life yet! Though it is very important to cherish the memories that we have made in the past, for they helped to make us who we are now, we must always remember that the person we were in the past does not limit the heights that we can climb if we are willing to try our hardest to climb to reach them.


It is your life! You have to live... No other persons have rights to enter into yours without your permission...

Friday, April 27, 2012

ஆய கலைகள் அறுபத்தி நான்கு

ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும்

ஏய உய்விக்கும் என் அன்னை

தூய உறுபளிங்கு போல் வாழ் – என்

உள்ளத்தில் இருப்பள் வாராது இடரே!



என்ற பாடலைக் கேள்வி பட்டிருக்கிறோம்.

அந்த அறுபத்தி நான்கு ஆயகலைகள் எவை?
போஜராஜன் பற்றிய ஜாதகக் கதைகளில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றின் வடமொழிப் பெயர்களும் விளக்கமும்

வரிசை எண் வடமொழிப் பெயர் தமிழ் பெயர் / விளக்கம்

1. கீதம் பாடல்

2. வாத்யம் இசைக்கருவிகள்

3. நர்த்தனம் ஆடல்

4. நாடகம் நாடகம்

5. சித்ரம் ஓவியம்

6. தண்டுலகுஸுமபலிவிகரம் திருஷ்டிகழித்தல் கோலமிடுதல் முதலியவை

7. புஷ்பாஸ்தரணம் பூ வேலைப்பாடுகள் மட்டும் அலங்கரிப்புகள்

8. விசேஷ கச்சேத்யம் விசேஷ முக அலங்கரிப்பு

9. தசனவஸநாங்கராகம் மருதாணி மற்றும் மூலிகை அலங்கரிப்பு

10. மணிபூமிகாகர்மா நகைகள் செய்வதற்கான ஆயத்த வேலைகள்

நகை வடிவமைப்பு

11. சயனஸுகம் படுக்கை, மெத்தை, அமருகைகள் வடிவமைத்தல்

12. உதக வாத்யம் / உதககாதம் புலன் விளையாடுதல்

13. சித்தயோகம் யோகக் கலை

14. மால்யக்ரதனம் பூ மாலை, தோரணங்கள் கட்டுதல்

15. சேகராபீடயோஜனம் கொண்டை அலங்காரம் (Hair style)

16. நைபத்ய யோஜனம் எதிர்பாலரை ஈர்த்தல்

17. கர்ணபத்ரபங்கம் தோடு, தொங்கட்டான் நகை வடிவமைப்பு

18. ஸுகந்தயுக்தி வாசனைப் பொருட்கள் தயாரிப்பு

19. பூஷன யோஜனம் உடையலங்காரம் / ஆடை அலங்கரிப்பு

20. பதாதிசஸ்த்ர ஸந்தானம் காலாட்படை பராமரிப்பு மற்றும் அவற்றின் ஆயுத வடிமவைப்பு, பயிற்சிகள்

21. சுளசுமாரயோகம் மளிகைப் பொருட்களை தாயாரித்தல்

22. ஹஸ்தலாவகம் கை வேலைப்பாடுகள்

23. பாகக்ஞானம் / பாகசாஸ்த்ரம் சமையல் கலை

24. ஆஸவாதிரசனை நீர் ஆகாரங்கள் பானங்கள் தயாரித்தல்

25. ஸூசீவாபகர்மம் தையல், ஊசி வேலைகள்

26. ஸூத்ரக்ரீடை நூல் வேலைப் பாடுகள்

27. வீணாதிரசனை வாத்யக்கருவிகள் தயாரித்தல்

28. ப்ரஹேளிகை தண்ட நீதி

29. ப்ரதிமாலா போட்டி பாடல் / எதிர் பாட்டு பாடுதல்

30. துர்வாசக யோகம் மல்யுத்தம், குத்துச்சண்டை பயிற்சிகள்

31. புஸ்தகவாசனம் கல்வியறிவு

32. ஆக்யாயிகாகதனம் பழைய நிகழ்வுகள், கதைகள், வரலாற்று அறிவு

33. காவ்ய ஸமஸ்யா நீதிக்கதை, காவிய (இலக்கிய) அறிவு

34. பட்டிகாவேத்ரவிகல்பம் தற்காப்பு ஆயுதங்கள் செய்தல்

35. தர்க்க சாஸ்த்ரம் தர்கக் கலை

36. தக்ஷணம் தச்சு வேலை

37. வாஸ்துவித்யா கட்டிடக்கலை

38. ரத்னபரீக்ஷை ரத்தினக்கற்களைப் பற்றிய அறிவு

39. க்ரஹக்ஞானம் சோதிட அறிவு

40. தாது வாதம் உலோகங்களைப் பற்றிய அறிவு

41. ஆகரக்ஞானம் அகழ்வாய்வு

42. வ்ருக்ஷாயுர்வேதம் மரம், தோட்டக்கலை, மூலிகையறிவு

43. குக்குடாதி யுத்தவிதி விலங்குப் போட்டிக்கு பயிற்பித்தல்

44. சுகசாரிகாலாபம் கிளி, புறா போன்ற பறவை பயிற்சி

45. உத்ஸாதனம் அழுத்தங்களிலிருந்து மனதையும் உடலையும் விடிவித்தல் (relaxing / relieving from tension etc.)

46. தேசாடனம் பிற தேசங்களைப் பற்றிய அறிவு

47. அக்ஷரமாத்ருகை / பால சிக்ஷை விரல்களால் சைகை செய்தல்

48. குவிகல்பம் விகடம்

49. தேசபாஷாஞானம் பிற மொழியறிவு

50. யந்த்ர மாத்ரகம் இயந்திர அறிவு

51. தாரணஞானம் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவு (சில இடங்களில் பொருட்கள் மற்றுமன்றி வார்த்தைகளின் உள்ளர்த்தம் அறிவதையும் குறிப்பதால், ரகசியங்களை – குறிப்பாக ஒற்றர்களின் சங்கேதங்களை – விடுவிக்கும் கலை (cryptology) என்றும் கூறலாம்

52. ஸம்வாச்யம் சங்கேதக் குறிப்புகளை உருவாக்குதல்

53. மானஸீக்ரியா அஷ்டாவதானம், தசாவதானம், சதாவதானம் மாயவித்தைகள் போன்ற அறிவு

54. அபிதான கோசம் நிகண்டுகள், இலக்கண அறிவு

55. சந்தோகஞானம் மருத்துவ அறிவு

56. க்ரியா விகல்பம் நித்திய கர்மங்கள் பற்றிய அறிவு

57. சலிதகயோகம் சாகச வேலைகளைச் செய்தல்

58. கோபனம் உடல் கூறுகள் மற்றும் கலவி அறிவு (உள்ளாடைகள் வடிவமைப்பு – வஸ்தர கோபம் – என்றும் கூறுவர்)

59. த்யூதவிசேஷம் சூதாட்டம் [சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் (indoor games) பற்றிய அறிவு என்றும் கூறுவர்]

60. ஆகர்ஷக்ரீடை போர் பயிற்சி

61. பாலககிரித்னகம் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் செய்தல்

62. வைநயிகி வித்யா நீதி பரிபாலனம்

63. ரஜ்ஜுக்ஞானம் கயிறு, சங்கிலி, ஏணி, கூடாரம் போன்றவைத் தயாரித்தல்

64. வைதரளகம் ஓடம், கப்பல் கட்டுதல், கடல் பயணம் செய்தல்


இவையனைத்தும் வடமொழி நூலிலிருந்துத் தொகுக்கப்பட்டவை. இவற்றில் சில இன்றைக்கு பொருந்துவதில்லை; சில வழக்கொழிந்து விட்டன. இன்றைய நிலையில் மேலும் பல கலைகள் சேர்க்கலாம். வாத்சாயனரின் காமசூத்திரத்திலும் இது போல ஒரு பட்டியல் இருக்கிறது. ”மொழி ஞாயிறு” தேவநேயபாவணர் தொகுத்த செந்தமிழ் பேரகரமுதலியில் இவற்றைத் தொகுத்துள்ளார். அவை:


1. எழுத்திலக்கணம் -அக்கரவிலக்கணம்

2. எழுத்தாற்றல் -   லிகிதம்

3. கணிதம் -           கணிதம்

4. மறைநூல் - வேதம்

5. தொன்மம் -  புராணம்

6. இலக்கணம் -   வியாகரணம்

7. நயனூல் -  நீதி சாத்திரம்

8. கணியம் -  சோதிடம்

9. அற நூல் -  தரும சாத்திரம்

10 ஓகநூல் -  யோக சாத்திரம்

11. மந்திர நூல்  -  மந்திர சாத்திரம்

12. நிமித்திகம் -  சகுனம்

13. கம்மியம் -  சிற்பம்

14. மருத்துவம்  -  வைத்தியம்

15. உறுவமைப்பு- சாமுத்ரிகா லட்சணம்

16. மறவனப்பு-  இதிகாசம்

17. வனப்பு -  அழகு

18. அணிநூல் -  அலங்காரம்

19. மதுரமொழிவு -  மதுர பாஷணம்

20. நாடகம்-  நாடகம்

21. நடம் -  ந்ருத்யம்

22. ஒலிநுட்ப அறிவு - சத்த ப்ரமம்

23. யாழ் - வீணை வாதனம்

24. குழல் - வேணு கானம்

25. மதங்கம் மிருதங்கம்

26. தாளம்-  தாளம்

27. விற்பயிற்சி -  அஸ்த்ர கலை

28. பொன் நோட்டம் - கனக பரீக்ஷா

29. தேர் பயிற்சி-   ரத பரீக்ஷா

30. யானையேற்றம்- கஜ பரீக்ஷா

31. குதிரையேற்றம் -  அஸ்வ பரீக்ஷா

32. மணிநோட்டம் -  ரத்தின பரீக்ஷா

33. மண்ணியல் -  பூமி பரீக்ஷா

34. போர்ப் பயிற்சி -  ஸங்கிரமண சாத்திரம்

35. மல்லம் (மல்யுத்தம்) -  துவந்த யுத்தம்

36. கவர்ச்சி - ஆகர்ஷணம்

37. ஓட்டுகை -  உச்சாடணம்

38. நட்பு பிரிப்பு (பேதம்)-  வித்வேஷணம்

39. காமநூல் - மதன சாத்திரம்

40. மயக்கு நூல்-  மோஹன சாத்திரம்

41. வசியம் - வஷ்ய கரணம்

42. இதளீயம் - ரச வாதம்

43. இன்னிசைப் பயிற்சி - காந்தருவ வாதம்

44. பிறவுயிர் மொழியறிவு - பைபீல வாதம்

45. மகிழுற்த்தம் - கவுத்துக வாதம்

46. நாடிப் பயிற்சி - தாது வாதம்

47. கலுழம்  - காருடம்

48. இழப்பறிகை -  நஷ்டம்

49. மறைபொருள் அறிதல் -  முஷ்டி

50 வான்புகவு - ஆகாய ப்ரவேசம்

51. வான் செலவு - ஆகாய கமனம்

52. கூடுவிட்டு பாய்தல் - பரகாய ப்ரவேசம்

53. தன்னுருக் கரத்தல் - அதிருஷ்யம்

54. மாயச்செய்கை - இந்திர ஜாலம்

55. பெருமாயச்செய்கை- மகேந்த்ர ஜாலம்

56. அழற்கட்டு - அக்னிஸ்தம்பம்

57. நீர்க்கட்டு -ஜலஸ்தம்பம்

58. வளிக்கட்டு - வாயுஸ்தம்பம்

59. கண்கட்டு - த்ருஷ்டுஸ்தம்பம்

60. நாவுக்கட்டு - வாக் ஸ்தம்பம்

61. விந்துக் கட்டு - சுக்கிலஸ்தம்பம்

62. புதையற்கட்டு - கனனஸ்தம்பம்

63. வாட்க்கட்டு - கட்க ஸ்தம்பம்

64. சூனியம் - அவஸ்த்யா ப்ரயோகம்

இவை, பிற்காலத்தில் சீரமைக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், முதல் பட்டியலைவிட இவை ஓரளவு ஏற்புடையதாக இருக்கின்றன.

Wednesday, April 18, 2012

Gold Rate has reached himalayan helight - 86 Year Statistics!

Nowadays money has no value. Money gets packed in lands and gold. Both had very least value some decades ago and it is sure nobody could imagine this kind of situation would happen in near future. And... now even a middle class family can't afford land and gold in a easy way like our pre generations.

I found this article and got stunned seeing the statistics.. I want you to make you ve the same feel...:)

Pls Note: If unable to see, click on the image to zoom it.



Who knows? Diamonds will be cheaper than gold in near future...!!!

என்னனமோ நடக்குதுங்க! ஒண்ணுமே புரியல! மலைப்பா இருக்கு!