Sunday, August 22, 2010

My Second Poem - Thuravu!

என் சமீபத்திய படைப்பு - துறவு.

துறவு!

திருமணப் புறக்கணிப்புக்கு
      ஓர் எளிய வழி!
திருத்தமான வாழ்வின்
      நுழைவாயில்!
மன அமைதியின் மிக அழகிய வெளிப்பாடு.
மனித மனதின் மாறுபட்ட சிந்தனைத் தொடக்கம்.
ஓழுக்கத்தின் உச்சகட்டம்!

பகவத் நாமத்தை பஜனை பாடுவது
      அல்ல துறவு!
ஐம்புலன்களை அடக்குவதில்
      அமைந்தது அது!

உண்மையில் அது ஓர்
     அழகான இல்லறம்!
இந்த காளான் காதல் உலகில்
     துறவும் சாத்தியமே!

3 comments:

  1. அன்பு அபிநயா..

    உங்கள் கவிதையின் தொடக்கமே இனிமை...! திருமண புறக்கணிப்பிற்கு எளிய வழி ...! எதோ எனக்கு உரைத்தது போல் இருந்தது..! காளான் காதல் என்பது நல்ல உவமை ...! ஆனால் காதலிப்பவர்கள் கவலையுருவார்கள் தங்கையே..! நாம் அனைவருமே காதலுக்கு பிறந்தவர்கள் என்பதை மறக்க வேண்டாம்..! இயற்கையே இந்த உலகத்தின் பால் கொண்ட காதலினால் தான் உலகமே சுழலுகிறது, நாம் எத்தனை மாசுபடுத்தியும், தூசுபடுத்தியும் நம்மை காக்கிறது..! ( பிறகெப்படி பூகம்பமும், சுனாமியும் என்று கேட்கிறாயா..? அது ஊடல்..! குட்டி சண்டைக்கே இப்படி..!) காதலை எனக்காக கொஞ்சம் பலிக்க வேண்டாம் தங்கையே...!!

    மா இ செந்தில் குமார்

    ReplyDelete
  2. Ok. Annan pechuku maru pechu undaaaa????
    KAADHAL VAAZHGA!
    Pyaar ki jai ho!
    Love is Great!

    Enaku therinja mozhigal la lam kaadhalai vaazhthi viten annan...

    ReplyDelete
  3. அருமையான கவிதை.... அழகான வார்த்தை கோர்வை...

    வாழ்த்துக்கள் அபி இன்னும் நிறைய எழுதுங்க....

    ReplyDelete